Thursday, June 21, 2018

நாட்டுபுறப் பாடல்கள்

தாலாட்டு பாடல்

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..


 ஏசல் பாடல்
 
செக்கச் சிவந்திருப்பாள் - குட்டி
..செட்டிமகள் போலிருப்பாள்
வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி
...வந்திருப்பாள் சந்தைக்கடை

சந்தையிலே மருக்கொழுந்து - குட்டி
... சரசமாத்தான் விற்குதடி!
கையிலொரு காசுமில்லை-குட்டி
... கடன்கொடுப்பார் யாருமில்லை!

வட்டவட்டப் பாறையிலே- குட்டி
... வரகரிசி தீட்டையிலே
ஆர்கொடுத்த சாயச்சீலை - குட்டி
... ஆலவட்டம் போடுதடி!

குழந்தைப் பாடல்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
அன்னக்கிளியே சாய்ந்தாடு
ஆவாரம்பூவே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளியே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக்குயிலே சாய்ந்தாடு
சுந்தரமயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.

No comments: